கற்பூர கரைசல் தயாரிப்பு முறை
10 லி டேங்-க்கு தேவையான அளவு
🍂 நாட்டு பசுவின் கோமியம் --.1/2 லிட்டர்
🍂 வேப்பெண்ணெய் -- 25 ml to 40 ml.
🍂 கிளிஞ்சல் சுண்ணாம்பு --10 கிராம்.
🍂 மஞ்சள்தூள் -- 10 கிராம்.
🍂 கட்டி கற்பூரம் -- 5 கிராம்.
🍂 நீலகிரி தைலம் -- 5 ml
🍂 சீயக்காய் பொடி --10 கிராம்
கட்டி கற்பூரத்தை, நீலகிரி தைலத்தில் சேர்த்தால், கற்பூரம் கரைந்து, நீர்ம நிலைக்கு வந்துவிடும்.
சீயக்காய் பொடியை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
சீயக்காய் கரைசலை, வேப்பெண்ணெய்யுடன் சேர்த்து கலக்கும் போது, வேப்பெண்ணெய் படலமாக தண்ணீரின் மீது மிதக்காமல், தண்ணீரோடு நன்கு கலந்துவிடும்.
கோமியத்துடன் மஞ்சள்தூள், சுண்ணாம்பு, சீயக்காய் கரைத்த வேப்பஎண்ணெய் கரைசல் மற்றும் நீலகிரி தைலத்துடன் சேர்க்கப்பட்ட கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி பயன்படுத்தவும்.
இம்முறையில் தயாரான கற்பூர கரைசலை 10 லிட்டர் டேங்க்கிற்கு நீர் கலந்து தெளிக்கவும்
குறிப்பு :
கற்பூர கரைசலை தேவைப்படும்போது, செய்து பயன்படுத்தவும்.
சேமித்து வைத்து பயன்படுத்த கூடாது
இளம் செடிகளுக்கு 25 ml வேப்பெண்ணெய்யும்.. மத்திய கால செடிகளுக்கு 30 ml வேப்பெண்ணையும்
வளர்ந்த செடிகளுக்கு 40 ml வரை பயன்படுத்தலாம்..
40 ml அளவு தாண்டாமல் தெளித்தால் நல்லது