புகையிலை சாகுபடி அட்டவணை

 இயற்கை முறையில் புகையிலை செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை:



அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 4 டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் , 

2 கிலோ சூடோமோனஸ், 

2 கிலோ பேசிலோமைசிஸ்

1 கிலோ பாஸ்போபாக்டீரியா

75 கிலோ சாம்பல் 

50 கிலோ வேப்பம் புண்ணாக்கு

2 கிலோ வாம்

கொடுப்பது நல்லது.


*வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை* 

நடவு நட்ட பின்பு


3 மூன்றாம் நாள்

உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம்.


5 ம் நாள் 

E.M 200 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் 1 லிட்டர் இ.எம் கரைசல் கலந்து தரைவழி தரவும்.


நடவு செய்த 12 ம் நாள்

பஞ்சகாவியா  200 ml per 10 liter tank spray செய்யவும் .

தரைவழி ஏக்கருக்கு 1 _2 லிட்டர் கொடுக்கலாம். இரண்டு கிலோ வாம் பவுடரை பாசனத்துடன் கலந்து தரைவழி தரவும்


 நடவு செய்த 20 ம் நாள்

ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும்.

 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி வேர்டீசீலீயும் லகானி கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம்.


நடவு நட்ட 30ம் நாள் 

மீன் அமிலம் 100 ml per 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

மாலையில் ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் மீன் அமிலம் தரைவழி பாசன நீருடன் கலந்து தரவும்.


35ம் நாள் 

கற்பூர கரைசல்/அக்னி அஸ்திரம்/கருவேல மரப்பட்டை கரைசல் அல்லது வெட்டி ஹீலியம் லக்கானி (50 ml/10lit) தெளிக்கலாம்


45 ம் நாள் 

பஞ்சகாவிய  200 ml per 10 liter tank spray செய்யவும் . 

தரைவழி ஏக்கருக்கு 2 _3 லிட்டர்+ 2 கிலோ வாம் பவுடரை பாசனத்துடன் கலந்து தரைவழி பாசனத்துடன் தரலாம்.


55 ஆம் நாள் :

10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி சூடோமோனஸ் கலந்து இலைகள் மேல் தெளிக்கலாம்.

ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ்+1 லிட் பாஸ்போபாக்டீரியா தரைவழி கொடுக்கலாம். 


65ம் நாள்:

மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ வேம் பவுடர்+ 2 லிட்டர் மீன் அமிலம் தரைவழி பாசன நீருடன் கலந்து தரவும்


70 ம் நாள் 

கற்பூர கரைசல்/அக்னி அஸ்திரம்/கருவேல மரப்பட்டை கரைசல் அல்லது வெட்டி ஹீலியம் லக்கானி  spray செய்யவும் .


75 ம் நாள்:

E.M 300 மில்லி/10 லிட் கலந்து தெளிக்கவும்.

ஒரு ஏக்கருக்கு 1கிலோ பாஸ்போபாக்டீரியா அல்லது 200 லிட்டர் கடலை புண்ணாக்கு கரைசல் தரைவழி தரவும்.


85 ம் நாள் 

மீன் அமிலம் 75 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம்.


ஒவொரு முறை நீர் பாய்ச்சும் போதும் 1 ஏக்கருக்கு

அமிர்தக்கரைசல் ஒரு 100 லிட்டர்,  

ஜீவாமிர்தம் 200 லிட்டர், 

மீன் அமிலம் 2 லிட்டர்,  

WDC 25 லிட்டர் 

என ஏதாவது ஒரு கரைசலை தண்ணீரோடு கலந்து விட்டு மண்ணை வளமாக்க வேண்டும்.. 


இலை வளர்ச்சிக்கு தழைச்சத்து முக்கியம். அதற்காக 

புகையிலை சாகுபடிக்கு முன்பு பல தானிய விதைப்பு அல்லது பசுந்தாள் உரம் செய்து 40 to 45 கழித்து மடக்கி ஓட்டி உழவு செய்தால் இன்னும் சிறப்பு..  களை கட்டுப்பட கைகளை மட்டும் எடுப்பது நல்லது.


ஒவ்வொரு முறை இலை பறிப்புக்கு பின்பும் சூடோமோனஸ் தெளித்துவிட்டு தரைவழி இடுபொருள் கொடுப்பது நல்லது.


மாதம் ஒருமுறை 200 லிட்டர் தண்ணீருக்கு 3 கிலோ சுண்ணாம்பு கலந்து 5 மணி நேரம் கழித்து பாசனம் தரும் ஈரத்தில் ஊற்றி விடவும். இது அவசியம் செய்ய வேண்டும்.


நிலத்தின் நீர் கொள்ளும் தன்மைக்கேற்ப அதிக நாள் இடைவெளியுடன் குறைந்த அளவு தண்ணீரை காலை நேரத்தில் பாய்ச்சுவது நல்லது.


ஒரு ஏக்கருக்கு 3000 கிலோ சராசரியாகவும், அதிகபட்சமாக 6000 கிலோ வரையிலும் மகசூல் எடுக்கலாம்.


பிரிட்டோ ராஜ் 

வேளாண் பொறியாளர்