வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள செடிகளுக்கு ஐந்திலை கரைசல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவை
1.வேம்பு(அசாடிரக்ட்டா இன்டிகா),
2.எருக்கம் (கேலோடிராபிஸ்),
3.கொலின்ஜி (டெப்ரோசியா பர்ப்யூரியா),
4.நொச்சி (விட்டெக்ஸ் நெகுண்டோ),
5.ஊமத்தை (டட்டுரா மிட்டல்),
6.காட்டாமணக்கு (ஜட்ரோபா கர்கஸ்),
7.அடாதோடா (அடத்தோடா வேசிகா)
8.புங்கம் (பொங்கேமியா பின்னட்டா),
மேற்கூறப்பட்டதில் ஏதாவது 5 இலைகள்களைப் பயன்படுத்தலாம்.
இதனை பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிராக செயலாற்றி இயக்கியாகப் பயன்படுகின்றது.
தயாரிப்பு முறை
தாவர வடிசாரை தயாரிக்க தனியாக மாட்டு சிறுநீர் 1:1 விகிதத்தில் (1கிலோ நறுக்கிய இலைகள் - 1 லிட்டர் மாட்டு நீரில்) தழைகளை 10 நாட்களுக்கு முக்கி வைக்கவும்.
வடிகட்டிய கரைசலை இயற்க்கை பூச்சி விரட்டியாக 10 லிட் டேங்கிற்கு 9 லிட் தண்ணீருடன் 1 லிட் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.